வாக்குச்சீட்டு விநியோகம் ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

by Staff Writer 26-10-2019 | 3:39 PM
Colombo (News 1st) இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின. எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு முன்னர் இந்த நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படுமெனவும் அந்த தினத்திற்குள் வாக்குச்சீட்டுக்களை பெறாதவர்கள், தாம் வசிக்கும் பிரதேசத்தின் தபால் அலுவலகத்தில் அவற்றை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார். மேலும், விநியோக நடவடிக்கைகளுக்காக தபால் திணைக்களத்தின் 8000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார். இதனிடையே, வாக்காளர்கள், வாக்குச்சாவடிகளுக்கு வருகை தரும்போது உத்தியோகப்பூர்வ வாக்குச்சீட்டைக் கொண்டு வர வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

ஏனைய செய்திகள்