இந்தியாவில் கைதான இலங்கை மீனவர்கள் 18 பேர் விடுதலை

இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 18 பேர் விடுதலை

by Staff Writer 26-10-2019 | 3:28 PM
Colombo (News 1st) இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 18 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் 18 பேரும் நேற்று (25) விடுதலை செய்யப்பட்டதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 3 ஆம் திகதி 18 இந்திய மீனவர்களும் தமிழக கரையோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.