by Staff Writer 25-10-2019 | 3:34 PM
Colombo (News 1st) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (28) நாட்டிலுள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், முஸ்லிம் பாடசாலைகளைத் தவிர ஏனைய அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
விடுமுறை வழங்கப்படும் தினத்திற்கு பதிலாக பிறிதொரு நாளில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு, அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.