by Staff Writer 25-10-2019 | 3:43 PM
Colombo (News 1st) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் சங்கீதம் மற்றும் நடன பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (28) ஆரம்பாகவுள்ளன.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நவம்பர் 8 ஆம் திகதி வரை செயன்முறைப் பரீட்சைகள் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்தார்.
இறுதி பெறுபேற்றில் நடைமுறைப் பரீட்சைக்கான புள்ளிகள் சேர்த்துக்கொள்ளப்படுமென்பதால், தவறாது இந்த பரீட்சைக்கு தோற்றுமாறு பரீட்சார்த்திகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
1295 பரீட்சை நிலையங்களில் செயன்முறைப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.