கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மறு அறிவித்தல் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை

by Staff Writer 24-10-2019 | 1:26 PM
Colombo (News 1st) மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை மேல் மாகாண கடற்பிராந்தியங்களில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் திணைக்களம் மீனவர்களை அறிவுறுத்தியுள்ளது. நிலவும் காற்றுடன் கூடிய வானிலையை அடுத்து, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் பத்மபிரிய திசேரா தெரிவித்துள்ளார். இதனால், ஏனைய கடற்பிராந்தியங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பிலும் அவதானத்துடன் செயற்படுமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.