கட்டுநாயக்கவிற்கு வந்த விமானம் மத்தளைக்கு மாற்றம்

கட்டுநாயக்கவிற்கு வந்த விமானம் மத்தளைக்கு அனுப்பப்பட்டது

by Staff Writer 24-10-2019 | 11:13 AM
Colombo (News 1st) சீரற்ற வானிலையால் 127 பயணிகளுடன் டில்லியில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த UL 192 விமானம் மத்தளை விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. குறித்த விமானம் இன்று (24) காலை 9.30 மணிக்கு மத்தளை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகவும் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் ஊடகப்பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதனிடையே, மேல் மாகாணம் உள்ளிட்ட சில மாகாணங்களில் தற்போது பலத்த மழை பெய்துவருகின்றது. வடக்கு, மேல், வட மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமணடலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.