64 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதான 64 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

by Staff Writer 24-10-2019 | 2:00 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் ஏ.சி, ரிஷ்வான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நுவரெலியாவில், தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பினூடாக ஆயுதப் பயிற்சி பெற்றமை தொடர்பில் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களில் 4 பெண்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.