by Bella Dalima 24-10-2019 | 3:59 PM
Colombo (News 1st) அநுராதபுரம் - புத்தளம் வீதியில் 4 ஆம் கட்டையில் வேனொன்று மரத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் 3 வயது குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த வேன் மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நாத்தாண்டியா , களுத்துறை மற்றும் பங்கதெனிய பகுதிகளை சேர்ந்தவர்களே அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.