BCCI இன் புதிய தலைவராக சௌரவ் கங்குலி

BCCI இன் புதிய தலைவராக சௌரவ் கங்குலி பொறுப்பேற்பு

by Staff Writer 23-10-2019 | 12:44 PM
Colombo (News 1st) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி பொறுப்பேற்றுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா BCCI இன் புதிய செயலாளராகவும் அருண் துமால் புதிய பொருளாளராகவும் பதவியேற்றுள்ளனர். துமால், BCCI இன் முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூரின் இளைய சகோதரர் ஆவார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அனைத்து பதவிகளுக்கும் வேறு வேட்பாளர்கள் எவரும் எதிர்த்து போட்டியிடாதமையால் தேர்தல் நடத்தப்படாமல் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். விஜயநகரம் மகாராஜாவுக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக நியமனம் பெற்றுள்ள முதல் இந்திய கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி என்பது குறிப்பிடத்தக்கது. சௌரவ் கங்குலி மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ள நிலையில் அவரால் BCCI தலைவராக 2020 செப்டம்பர் வரை மாத்திரமே செயற்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.