பூஜித், ஹேமசிறி ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்

பூஜித் மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மீண்டும் விளக்கமறியல்

by Staff Writer 23-10-2019 | 10:49 AM
Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இன்று (23) ஆஜர்படுத்தப்பட்டனர். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் கடந்த ஜூன் 9 ஆம் திகதி பிணை வழங்கியதுடன், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆரச்சி குறித்த பிணை உத்தரவை கடந்த 9 ஆம் திகதி இரத்து செய்து உத்தரவிட்டார். பிணை உத்தரவு மிகவும் பாரதூரமான சட்டக் குறைபாடுகளுடன் கூடிய சட்டத்திற்கு முரணான ஒன்றென மேல் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. இதனால் குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கு முன்னர் இருந்த நிலைக்கு உட்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவானுக்கு மேல் நீதிமன்றம் அன்றைய தினம் உத்தரவிட்டிருந்தது.