விவாதத்திற்கு வருமாறு கோட்டாபயவிற்கு சஜித் அழைப்பு

பகிரங்க விவாதத்திற்கு வருமாறு கோட்டாபய ராஜபக்ஸவிற்கு சஜித் பிரேமதாச அழைப்பு

by Staff Writer 23-10-2019 | 9:11 PM
Colombo (News 1st) நாட்டு மக்கள் அனைவரும் பார்க்கக்கூடிய வகையில், தொலைக்காட்சியில் பகிரங்க விவாதம் ஒன்றிற்கு வருமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார். சஜித் பிரேமதாச தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமது கொள்கைகள் மற்றும் நோக்கு தொடர்பில் இதன்போது ஒருவருக்கு ஒருவர் பகிரங்கமாக கருத்துக்களை மக்களுக்கு வௌியிட முடியும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பலமான வேட்பாளர் ஒருவர் தமது எதிராளியுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதில் அச்சமடையத் தேவையில்லை எனவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.