இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

by Staff Writer 23-10-2019 | 1:26 PM
Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரச செலவீனங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான 4 மாதங்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் கணக்கறிக்கைக்கு அமைய அரசாங்கத்தின் உத்தேச செலவீனம் 1474 பில்லியன் ரூபாவாகும். வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால், அடுத்த வருடத்திற்கான வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை. இதற்கமைவாகவே இன்று இடைக்கால கணக்கறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த 4 மாதங்களுக்கான கடன் எல்லையாக 721 பில்லியன் ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.