by Staff Writer 23-10-2019 | 8:44 AM
Colombo (News 1st) அரசுக்கு சொந்தமான களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்லை, சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆலைகளிலிருந்து லங்கா சதொச வலையமைப்பின் ஊடாக நுகர்வோருக்கு அரிசியை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் நாட்டரிசியை 80 ரூபாவுக்கும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியை 85 ரூபாவுக்கும் விற்பனை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.