கண்காணிப்பில் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு

by Staff Writer 22-10-2019 | 8:28 AM
Colomb (News 1st) ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழு இன்று (22) முதல் ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்காக 30 பேர் கொண்ட குழுவினர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள் மற்றும் தேர்தலுக்கு பின்னரான நிலவரங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழு ஆராயவுள்ளது. இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 30 பேர் கொண்ட மற்றுமொரு குழுவினர் எதிர்வரும் 12 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்