by Staff Writer 22-10-2019 | 3:23 PM
Colombo (News 1st) தெற்கு அதிவேக வீதியின் களுத்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த காரொன்று தெற்கு அதிவேக வீதி ஊழியர்கள் மூவர் மீது மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.