தீபாவளி முற்பணத்தை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

தீபாவளி முற்பணத்தை வழங்குமாறு கோரி அக்கரப்பத்தனை மக்கள் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 22-10-2019 | 11:58 AM
Colombo (News 1st) அக்கரப்பத்தனை - பெல்மோரல் தோட்ட மக்கள் தமக்கான தீபாவளி முற்பணத்தை வழங்குமாறு கோரி இன்று (22) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழுந்து மடுவத்திற்கு முன்பாக இன்று காலை 8 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீபாவளி முற்பணம் இதுவரை வழங்கப்படவில்லை என மக்கள் இதன்போது தெரிவித்துள்ளனர். தீபாவளிக்காக மாதாந்த ஊதியத்திலிருந்து ஒதுக்கப்படும் 1 000 ரூபாவும் வழங்கப்படவில்லை என தெரிவித்தே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.