வீடொன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

யாழ். கோண்டாவில் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

by Staff Writer 21-10-2019 | 3:26 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தனியாக வீட்டில் வசித்துவந்த 61 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலத்தை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.