தேர்தல் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடுகள்

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடுகள்

by Staff Writer 21-10-2019 | 5:22 PM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 1134 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 8 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1087 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 39 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, நேற்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 100 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.