ஜப்பானுக்கு பயணமானார் ஜனாதிபதி

ஜப்பானுக்கு பயணமானார் ஜனாதிபதி

by Fazlullah Mubarak 21-10-2019 | 7:21 AM

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானுக்கு பயணமாகியுள்ளார்.

நாளை நடைபெறவுள்ள ஜப்பானிய பேரரசர் நருஹிடோவின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியுடன் 20 பேர் கொண்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஜப்பானுக்கு பயணித்ததாக, விமான நிலையத்தின் கடமை நேர அதிகாரி கூறியுள்ளார். முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ், சவுதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மது பின் சல்மான் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.