by Staff Writer 20-10-2019 | 11:05 AM
Colombo (News 1st) வெயாங்கொட - கும்பல்ஒலுவ பகுதியில் இன்று (20) அதிகாலை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்ததில் இந்தக் கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
29 வயதான ஒருவரே இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
கொல்லப்பட்டவரின் சடலம் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.