நுவரெலியாவில் Pears செய்கை விஸ்தரிப்பு

நுவரெலியாவில் Pears செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

by Chandrasekaram Chandravadani 20-10-2019 | 7:13 AM
Colombo (News 1st) நுவரெலியா மாவட்டத்தில் Pears செய்கையை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு சந்தைக்குத் தேவைப்படும் Pears பழங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நோக்கில் இதற்கான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் தேயிலைத் தோட்டங்களில் Pears செய்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.