by Staff Writer 20-10-2019 | 1:55 PM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலுக்காக அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்துகின்றமை தொடர்பில் அதிக முறைப்பாடுகள் பதிவாகுவதாக தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 128 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக Paffrel அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல்கள் நெருங்கும் நிலையில் இதுவரை 207 முறைப்பாடுகள் தமது அமைப்பிற்கு கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் கண்காணிப்பகத்தின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.