சுதந்திரக் கட்சியிலிருந்து இசுறு தேவப்பிரிய

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்

by Staff Writer 19-10-2019 | 3:18 PM
Colombo (News 1st) மேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அவர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் மகரகம தொகுதி அமைப்பாளர் பதவிகளை வகித்து வந்தார். இது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவிய போது, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன் தாம் பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவளிப்பதாக இசுறு தேவப்பிரிய கூறினார்.