சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டிய தேவை பல தமிழ் கட்சிகளுக்கு இருப்பதாக சிவாஜிலிங்கம் தெரிவிப்பு

by Staff Writer 19-10-2019 | 10:30 PM
Colombo (News 1st) சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் திருகோணமலையில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது, தமிழ் கட்சிகள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதற்கு போதிய நியாயங்கள் இருப்பதாகக் கருதினால், அந்த நியாயத்தினை தமிழ் மக்களுடைய பெரும்பாலான அமைப்புகளும் புத்திஜீவிகளும் மதத் தலைவர்களும் ஏற்றுக்கொண்டால், தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தாம் விலகிக்கொள்வதாகக் குறிப்பிட்டார். சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டிய தேவை பல தமிழ் கட்சிகளுக்கு இருப்பதாகவும் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்.