by Staff Writer 19-10-2019 | 3:33 PM
Colombo (News 1st) ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இந்த நிகழ்வில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.