மஞ்சு ஶ்ரீ அரங்கல காலமானார்

மேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மஞ்சு ஶ்ரீ அரங்கல காலமானார்

by Staff Writer 18-10-2019 | 3:48 PM
Colombo (News 1st) மேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மஞ்சு ஶ்ரீ அரங்கல காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அன்னார் தனது 61 ஆவது வயதில் இன்று முற்பகல் காலமானார். ஹோமாகம பிரதேச சபையின் உறுப்பினராக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த இவர், மேல் மாகாண சபையின் உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். மஞ்சு ஶ்ரீ அரங்கலவின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மீகொட - புவக்வத்த பகுதியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்குகள் எதிர்வரும் திங்கட்கிழமை (21) இடம்பெறவுள்ளன.