திவுலப்பிட்டியவில் 30 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றல்: மூவர் கைது

by Staff Writer 18-10-2019 | 4:26 PM
Colombo (News 1st) திவுலப்பிட்டிய மில்காசிவத்த பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். திவுலப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இன்று முற்பகல் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, போதைப்பொருள் அடங்கிய 32 பொதிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். திவுலப்பிட்டிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்