கிளிநொச்சி, முல்லைத்தீவில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி விடுவிப்பு

by Staff Writer 18-10-2019 | 3:55 PM
Colombo (News 1st) கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. காணி விடுவிப்பிற்கான நிகழ்வு இரணைமடு பகுதியிலுள்ள இராணுவ கட்டளைத் தளபதியின் அலுவலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது. இராணுவ தளபதி, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.