இலங்கை மீனவர்களை விடுவிக்குமாறு கோரிக்கை

இந்தியாவில் கைதாகியுள்ள இலங்கை மீனவர்களை தீபாவளிக்கு முன்னர் விடுவிக்குமாறு கோரிக்கை

by Staff Writer 18-10-2019 | 3:32 PM
Colombo (News 1st) இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 24 பேரையும் தீபாவளிக்கு முன்னர் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் திணைக்களம் மற்றும் வௌிவிவகார அமைச்சு ஆகியன இணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 18 மீனவர்களும் மாத்தறையிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 6 மீனவர்களும் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, இலங்கையில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 14 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.