by Staff Writer 18-10-2019 | 4:17 PM
Colombo (News 1st) ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் யாழ். மாவட்டத்தில் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
51,000 மில்லியன் ரூபா செலவில் வீதிகளை புனரமைக்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள 343 வீதிகளின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
அதற்கமைய 1034.18 கிலோமீட்டர் வீதி முழுமையாக புனரமைக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.