யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு

by Staff Writer 17-10-2019 | 10:37 AM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சற்று ​நேரத்திற்கு முன்னர் திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாகும். இந்தத் திறப்பு விழா நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு அதிதிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர். யாழ். நகரிலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பலாலி பகுதியில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.