by Staff Writer 17-10-2019 | 7:45 AM
Colombo (News 1st) நிலவும் சீரற்ற வானிலை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாத்தளை - கந்தேநுவர எல்கடுவ பிரதான வீதியின் உனுகலை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால் அவ் வீதியூடனான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
நேற்று (16) பெய்த பலத்த மழை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இன்று (17) காலை வேளையிலேயே மண்மேடு அகற்றப்படவுள்ளதால், குறித்த வீதியூடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.