by Staff Writer 17-10-2019 | 8:05 AM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் காலத்தில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்படும் என தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கான சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.