அதிகாரிகளுக்கு கணக்காய்வாளர் நாயகம் ஆலோசனை

கணக்காய்வு அதிகாரிகளுக்கு கணக்காய்வாளர் நாயகம் ஆலோசனை

by Staff Writer 17-10-2019 | 9:53 AM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் முறைப்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரணை செய்யுமாறு அனைத்து கணக்காய்வு அதிகாரிகளுக்கும் கணக்காய்வாளர் நாயகம் ஆலோசனை வழங்கியுள்ளார். விசேட சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைய, குறித்த சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் W.C. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். குறித்த முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு பிரதி கணக்காய்வாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, அரச நிறுவனங்களில் நியமனங்கள் வழங்கப்படுவது குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கணக்காய்வாளர் நாயகம் W.C. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.