by Staff Writer 17-10-2019 | 7:05 AM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஒரு வார காலத்திற்குள் 673 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்றைய நாளில் மாத்திரம் 85 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 650 முறைப்பாடுகளும் தேர்தல் தொடர்பான வன்முறைகள் குறித்து 6 முறைப்பாடுகளும் தேர்தல் தொடர்பில் 17 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் PAFFREL அமைப்புக்கு 62 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.