English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
17 Oct, 2019 | 3:38 pm
Colombo (News 1st) குத்துச்சண்டை போட்டியின் போது மூளை அதிர்ச்சியால் பாதிப்படைந்த அமெரிக்க வீரர் பேட்ரிக் டே (27) உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தில் USBA குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. இதில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் நியூயார்க்கை சேர்ந்த முன்னாள் கோல்டன் கிளவுஸ் சாம்பியன் பேட்ரிக் டேவும், ஒகியோ மாநிலத்தைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியனான கான்வெல்லும் மோதினர்.
போட்டியின் 10 ஆவது சுற்றில் இருவரும் மோதிக்கொண்ட போது திடீரென பேட்ரிக் மயங்கி கீழே வீழ்ந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பேட்ரிக் மூளை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நான்கு நாட்களாக கோமாவில் இருந்த பேட்ரிக் டே நேற்று (16) உயிரிழந்தார்.
இந்நிலையில் பேட்ரிக் டே எதிர்த்து விளையாடிய கான்வெல்,
போட்டியை நான் போட்டியாக மட்டுமே பார்க்கிறேன். அவரை வெற்றிகொள்வது மட்டுமே என் நோக்கமாக இருந்ததே தவிர அவரை காயப்படுத்துவதோ, தாக்குவதோ என் நோக்கமாக இருக்கவில்லை. குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து இத்துடன் விலகிக்கொள்ள முடிவு செய்துள்ளேன்
என கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் மட்டும் உலக அளவில் குத்துச்சண்டை போட்டி மைதான வளையத்திற்குள் இதுவரை 3 குத்துச்சண்டை வீரர்கள் மூளை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
27 Feb, 2020 | 05:34 PM
06 Mar, 2019 | 03:54 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS