மலையக மார்க்க ரயில் சேவைகள் அதிகரிப்பு

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் அதிகரிப்பு

by Staff Writer 16-10-2019 | 7:46 AM
Colombo (News 1st) மலையக ரயில் மார்க்கத்தினூடான ரயில் சேவைகளை அதிகரிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்பிரகாரம் கொழும்பு, கோட்டை - கண்டி, கொழும்பு, கோட்டை - பதுளை மற்றும் கொழும்பு, கோட்டை - மாத்தளை வரையான ரயில் சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளன. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் இதற்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் இதற்காக 9 ரயில் பெட்டிகள் இறக்குமதி செய்யப்படுவதுடன் இதில் 4 பெட்டிகளை இவ் வருட இறுதிக்குள் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கொழும்புக்கும் கண்டிக்கும் இடையில் தற்போது 12 ரயில் சேவைகளும் கொழும்புக்கும் பதுளைக்கும் இடையில் 8 ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. ரயில்வே திணைக்களத்தின் திட்டத்தின் முதல்கட்டமாக "தெனுவர மெனிக்கே" எனும் பெயரிலான நகரங்களுக்கு இடையிலான ரயிலொன்றை இம்மாத இறுதிக்குள் சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.