செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 16-10-2019 | 6:05 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. முன்னாள் பிரதி அமைச்சர் விக்டர் அன்ரனி பெரேரா, சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு 02. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான பொது ஆவணத்தில் 5 தமிழ் கட்சிகள் கையொப்பம் 03. கொழும்பு குப்பைகளை அறுவைக்காட்டில் கொட்டும் செயற்பாடு இடைநிறுத்தம் 04. மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் மதிய போசனம் வழங்கப்படும் என சஜித் வாக்குறுதி 05. ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு 06. ஜனாதிபதித் தேர்தலுக்காக 2 விசேட நடவடிக்கை பிரிவுகள் ஸ்தாபனம் 07. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பரீட்சார்த்த விமானம் தரையிறக்கம் 08. இரட்டைக் கொலைக் குற்றவாளி ஒருவருக்கு மரணதண்டனை 09. எல்பிட்டிய தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் பெயர்களை உடன் அனுப்புமாறு அறிவுறுத்தல் 10. D.A. ராஜபக்ஸ அருங்காட்சியகம் தொடர்பிலான வழக்கு ஒத்திவைப்பு 11. சமையல் எரிவாயுவை அதிக விலையில் விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை 12. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 513 முறைப்பாடுகள் 13. எதிர்வரும் வௌ்ளிக்கிழமை முதல் தற்காலிக அடையாள அட்டை விநியோகம் 14. யானைகளின் உயிரிழப்பு தொடர்பிலான அறிக்கை இந்த வாரம் வௌிநாட்டுச் செய்திகள் 01. மெக்ஸிக்கோவின் மேற்குப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பு 02. சிரியாவின் வட பிராந்தியத்தில் துருக்கி முன்னெடுக்கும் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்நாட்டு அமைச்சுக்கள் இரண்டின் மீதும் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மூவரின் மீதும் அமெரிக்கா தடை விதிப்பு விளையாட்டுச் செய்திகள் 01. ஸிம்பாப்வே மற்றும் நேபாள கிரிக்கெட் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை மீண்டும் உறுப்புரிமை வழங்கியுள்ளது. 02. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் அணித் தலைவர் செளரவ் கங்குலி போட்டியின்றி தெரிவு

ஏனைய செய்திகள்