கஞ்சிப்பானை இம்ரானின் தந்தைக்கு பிணை

கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட அறுவருக்கு பிணை

by Staff Writer 16-10-2019 | 4:23 PM
Colombo (News 1st) பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றவாளியான கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட 6 சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு காலி பிரதம நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். காலி பிரதம நீதவான் ஹர்ஷன கெக்குணுவெல முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்திய போதே பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான தனித்தனி சரீரப் பிணையிலும், தலா 20,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும் சந்தேகநபர்கள் செல்ல பிரதம நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரானுக்கு உணவுப்பொதிக்குள் மறைத்து வைத்து இரண்டு கையடக்க தொலைபேசிகளையும் சார்ஜர்களையும் வழங்க முயற்சித்த போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.