D.A.ராஜபக்ஸ அருங்காட்சியக வழக்கு ஒத்திவைப்பு

D.A. ராஜபக்ஸ அருங்காட்சியகம் குறித்த வழக்கு ஒத்திவைப்பு

by Staff Writer 15-10-2019 | 1:11 PM
Colombo (News 1st) D.A. ராஜபக்ஸ அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தினால் இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை தெமுலன D.A. ராஜபக்ஸ அருங்காட்சியக நிர்மாணப்பணிகளின்போது, 33.9 மில்லியன் அரசநிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்றைய வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்