BCCI தலைவரானார் சௌரவ் கங்குலி

BCCI தலைவரானார் சௌரவ் கங்குலி

by Bella Dalima 15-10-2019 | 3:52 PM
Colombo (News 1st) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) புதிய தலைவராக முன்னாள் அணித் தலைவர் செளரவ் கங்குலி போட்டியின்றி தெரிவாகியுள்ளார். BCCI புதிய நிர்வாகிகள் தேர்தல் ஒக்டோபர் 23 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய 14 ஆம் திகதி இறுதி நாள் என தேர்தல் அதிகாரி என்.கோபாலஸ்வாமி அறிவித்தார். இந்நிலையில், கங்குலி மட்டுமே தலைவர் பதவிக்கு மனு செய்தார். இதையடுத்து அவர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். செயலாளர் பதவிக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநில கிரிக்கெட் சங்க இணைச் செயலாளராக ஜெய் ஷா உள்ளார்.