ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பிரதி அமைச்சர் விக்டர் அன்ரனி பெரேரா சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு

by Staff Writer 15-10-2019 | 10:03 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பிரதி அமைச்சர் விக்டர் அன்ரனி பெரேரா, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளார். சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார அலுவலகத்திற்கு சென்ற விக்டர் அன்ரனி பெரேரா, தனது ஆதரவை வழங்கி ஊடக சந்திப்பொன்றிலும் கலந்துகொண்டார். இதன்போது, மஹிந்த ராஜபக்ஸவிற்கு அடிபணிந்தால், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப முடியாமற்போகும் என அவர் குறிப்பிட்டார்.