2 விசேட நடவடிக்கை பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன

ஜனாதிபதி தேர்தலுக்காக இரண்டு விசேட நடவடிக்கை பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன

by Staff Writer 15-10-2019 | 4:34 PM
Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தலுக்காக இரண்டு விசேட நடவடிக்கை பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தேர்தல் பிரசார பேரணிகள் முன்னெடுக்கப்படும் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். பிரதி பொலிஸ் மா அதிபர் W.M.M. விக்ரமசிங்கவின் கண்காணிப்பின் கீழ் இந்த விசேட பிரிவு செயற்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை முன்னெடுப்பதற்காக மற்றுமொரு விசேட பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் K.P.M. குணரத்னவின் கண்காணிப்பின் கீழ் இந்த விசேட பிரிவு செயற்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.