ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பில் வௌிநாட்டவர்கள் 

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பில் வௌிநாட்டுக் கண்காணிப்பாளர்கள்

by Staff Writer 14-10-2019 | 2:51 PM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக நூற்றுக்கும் அதிகமான வௌிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த 20 கண்காணிப்பாளர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 60 பேரும் சார்க் நாடுகளைச் சேர்ந்த 25 பேரும் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக அறிவிப்பு கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. இதேவேளை, பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த இரு கண்காணிப்பாளர்கள் தற்போது நாட்டிற்கு வருகைதந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாளைய தினம் நாட்டிற்கு வருகைதரவுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் மற்றும் தேர்தலின் பின்னர் நாட்டின் நிலைமை ஆகியன குறித்து சர்வதேச கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். இதேவேளை, உள்நாட்டுத் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் சிலவற்றிற்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.