ஹோட்டலொன்றில் போதைப்பொருட்களுடன் 25 பேர் கைது

ஹோட்டலொன்றில் போதைப்பொருட்களுடன் 25 பேர் கைது

by Staff Writer 13-10-2019 | 4:36 PM
Colombo (News 1st) அவிசாவளையில் ஹோட்டலொன்றில் போதைப்பொருட்களுடன் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் ஊடாக நண்பர்களான சந்தேகநபர்கள் தாம் ஏற்பாடு செய்திருந்த விருந்துபசார நிகழ்வில் போதைப்பொருட்களை பயன்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. எம்பிலிப்பிட்டிய, தெஹியோவிட்ட, கொஸ்கொட, கொழும்பு மற்றும் காலி, மாத்தறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை இன்று அவிசாவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.