மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு

வெலிமடையில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு

by Staff Writer 13-10-2019 | 2:37 PM
Colombo (News 1st) வெலிமடை நகரிலுள்ள பிரதேச சபைக் கட்டடத்திற்கு அருகிலுள்ள வீடொன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு (12) 9.45 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 2 சிறுவர்களும் யுவதி ஒருவருமே உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதுடன் வெலிமட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 14 மற்றும் 10 வயதான சிறுவர்களும் 18 வயதான யுவதியும் அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, மொரவக்க கொடிகாரகொட பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். கால்லவத்த பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். காயமடைந்த பெண் மொரவக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.