வாக்குச்சீட்டுகள் 6 இற்கு முன்னர் ஆணைக்குழுவிற்கு

வாக்குச்சீட்டுகள் எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள ஆணைக்குழுவிற்கு

by Staff Writer 13-10-2019 | 3:19 PM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஒப்படைக்கப்படும் என அரச அச்சகம் தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே கூறியுள்ளார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் வாக்குச்சீட்டின் நீளம் 26 அங்குலமாக அமையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டினை அச்சிடும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.