மீண்டும் தலைதூக்கும் படைப்புழுவின் தாக்கம்

மீண்டும் தலைதூக்கும் படைப்புழுவின் தாக்கம்

by Staff Writer 13-10-2019 | 3:32 PM
Colombo (News 1st) பெரும்போகத்தில் சோளச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், படைப்புழு பரவும் வேகம் அதிகரித்துள்ளமை ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், செய்கைகைக்கு இதுவரை பாதிப்பு இல்லை என விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. படைப்புழுத் தாக்கத்தை கருத்திற்கொண்டு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர், சோள அறுவடையை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.