கோட்டாபய ராஜபக்ஸ நாடு திரும்பினார்

கோட்டாபய ராஜபக்ஸ நாடு திரும்பினார்

by Staff Writer 12-10-2019 | 3:31 PM
Colombo (News 1st) மருத்துவ சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் சென்றிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ நாடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை அவர் நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர அதிகாரி தெரிவித்தார். கடந்த 9 ஆம் திகதி முதல் இன்று வரை சிங்கப்பூருக்கு செல்வதற்கு கோட்டாபய ராஜபக்ஸவிற்கு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.