சேவையில் இணையும் தெனுவர மெனிக்கே கடுகதி ரயில்

கொழும்பிலிருந்து தம்புள்ளை வரை சேவையில் இணையும் தெனுவர மெனிக்கே கடுகதி ரயில்

by Staff Writer 12-10-2019 | 4:21 PM
Colombo (News 1st) இம்மாத இறுதிக்கு முன்னர் 'தெனுவர மெனிக்கே' என்ற பெயரில் நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் கொழும்பில் இருந்து தம்புள்ளை வரை சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்தமையினால் தூரப்போக்குவரத்து ரயில் சேவைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் புதிய மேலதிக ரயில்களை சேவையில் இணைக்க தீர்மானித்ததாக டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார். குறித்த புதிய கடுகதி ரயில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள புதிய ரயில் பெட்டிகளைப் பயன்படுத்தி சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. வாரத்தில் ஒரு நாளில் மாத்திரம் கொழும்பு முதல் பதுளை வரை குறித்த ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், அடுத்த நாள் மீண்டும் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளது. மூன்று அதிசொகுசு பெட்டிகளுடன் மொத்தமாக 8 பெட்டிகளைக் கொண்டதாக குறித்த ரயில் அமைந்துள்ளது.